Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM
திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் சாய்சுருதி ஆசிரமத்தில் காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தார்.
கொடைக்கானல் ஏரிச்சாலையில் சாய்சுருதி ஆசிரமம் உள்ளது. இங்கு சத்தியசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன. முதல் நாள் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 2-வது நாள் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் பங்கேற்க நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடைக்கானல் வந்தார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
காயத்ரிதேவி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தின்போது கோபு ரத்தின் மீது ஏறி கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினமே ஹெலிகாப்டர் மூலம் மதுரைவந்து விமானம் மூலம் சென்னை சென்றார். இவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந் ததால் அவர் வந்துசென்ற பிறகே இத்தகவல் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT