Last Updated : 16 Sep, 2021 02:43 PM

 

Published : 16 Sep 2021 02:43 PM
Last Updated : 16 Sep 2021 02:43 PM

புதுச்சேரியில் 107 பேருக்கு கரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப்.16) வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 5,214 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 60, காரைக்காலில் 34, ஏனாமில் 4, மாஹேவில் 9 பேர் என மொத்தம் 107 பேருக்கு (2.05 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 173 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 790 பேரும் என 963 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி ராகவேந்திரா நகரைச் சேர்ந்த 56 வயது ஆண், ஏனாம் கனகலப்பேட்டாவைச் சேர்ந்த 56 வயது ஆண் என 2 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,827 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

புதிதாக 40 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 380 (97.77 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 83 ஆயிரத்து 568 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x