Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் 16, 17-ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
18, 19-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கன மழையும், ஒருசிலஇடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஒருசிலஇடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT