Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து 2 நாளில் பாஜக முடிவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி முடிவு குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க, நேற்று அவர் வந்திருந்தார்.

அப்போது அவரிடம், ‘அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. அதே அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஜகவின் நிலை என்ன?’ என்று கேட்கப்பட்டது,

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு, இரு தினங்களில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி அறிவிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x