பல்லடம் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி

பல்லடம் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி
Updated on
1 min read

திருப்பூரைச் சேர்ந்த நாக ராஜன், இவரது சகோதரர் ரமேஷ், இடையர்பாளையத் தைச் சேர்ந்த பாலாஜி, நாக ராஜபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஷ்ணு ஆகியோருடன் காரில் ராமேசுவரம் சென்றுள் ளனர்.

தை அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு, நேற்று அதி காலை திருப்பூர் நோக்கி திரும்பி கொண்டிருந்த போது தாராபுரம் பல்லடம் சாலை புத்தரச்சல் என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு வேன் மீது இவர்களுடைய கார் மோதியது. இதில், காரில் பய ணித்த 4 பேரும் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீ ஸார் சென்று, சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in