Published : 05 Feb 2016 09:24 AM
Last Updated : 05 Feb 2016 09:24 AM
தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு பிப்ரவரி 9-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் சுற்றுலாத்துறை முடங்கிப் போய் தற்போது மீண்டு வருகிறது. இந்திய மாநிலங்களில் சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதனைத் தக்க வைக்கவும் சுற்றுலா சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கும் 60 பேருக்கு விருதுகள் வழங்கி அவர்களை ஊக்குவிக்க தமிழக சுற்றுலாத் துறை முடிவெடுத்து உள்ளது.
இதன்படி சுற்றுலாத் துறையில் பல வருடங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ், மதுரா வெல்கம், தமிழகத்தின் முதன்மை சுற்றுலா காலாண்டு இதழ் சார்பாக இந்திய அரசின் இந்தியா டூரிஸம் ஆதரவுடன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஹோட்டல் அம்பாசடர் பல்லவாவில் மார்ச் 4-ம் தேதி நடைபெறும். விருதுக்கு விண்ணப் பிக்க கடைசி தேதி 9.2.2016.
விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்யும் முகமாக நியமன விண்ணப்பம் மற்றும் விவரங்களை www.tamilnadutourismaward.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT