Last Updated : 14 Sep, 2021 05:19 PM

 

Published : 14 Sep 2021 05:19 PM
Last Updated : 14 Sep 2021 05:19 PM

புதுச்சேரியில் 103 பேருக்கு கரோனா

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப்.14) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,697 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 52, காரைக்காலில் 38, ஏனாமில் 2, மாஹேவில் 11 பேர் என மொத்தம் 103 பேருக்கு (1.81 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 167 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 691 பேரும் என 858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக உயிரிழப்பு இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,823 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 105 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 258 (97.85 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 71 ஆயிரத்து 79 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x