சென்னை சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: ஒடிசா சென்று சிமி இயக்கத்தினரிடம் வாக்குமூலம் பெற்றது தமிழக போலீஸ்

சென்னை சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: ஒடிசா சென்று சிமி இயக்கத்தினரிடம் வாக்குமூலம் பெற்றது தமிழக போலீஸ்
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்புக்கு பொறுப் பேற்ற சிமி இயக்கத்தினரிடம் ஒடிசா சென்று தமிழக போலீஸார் வாக்குமூலம் வாங்கினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ம் தேதி பெங்களூரு-குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. சிறிது நேரதில் அந்த ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பில் ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி (24) பலியானார். 14 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் சிமி இயக்கத்தை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூரு-குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பை தாங்கள் தான் நிகழ்த்தியதாக அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தமிழக போலீஸார் ஒடிசா சென்று அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in