Published : 13 Sep 2021 05:20 PM
Last Updated : 13 Sep 2021 05:20 PM

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி முதல் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனிடையே, கோடநாடு விவகாரம், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பாக பல்வேறு விவகாரங்களில் சட்டப்பேரவையில் திமுக - அதிமுக இடையே விவாதம் ஏற்பட்டது. சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், இன்று (செப். 13) மூன்று நாள் விடுமுறைக்குப் பின் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x