Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM
மணிமுக்தா ஆற்றின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவதாக விருத்தாசலம் நகரவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக மணிமுக்தா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒருபுறத்தில் விருத்த கிரீஸ்வரர் கோயிலும், கிழக்குப் புறத்தில் வணிக வளாகமும் உள்ளது. இந்த ஆற்றின் சுற்று வட்டாரப் பகுதியில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை மற்றும் கடைவீதியும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதுதவிர விருத்தாசலம் நகரப் பகுதி கழிவு நீரும் இந்த ஆற்றில் வழியாகத் தான் வெளியேற்றப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் 29-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தியும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் கழிவுநீரை வெளியேற்ற ஆற்றினுள் தனி கால்வாய் அமைத்து வருகிறது.
இதனிடையை ஆற்றினுள் கழிவுநீர் வெளியேற தோண்டப்பட்ட வாய்க்காலை ஒட்டி ஆற்றுக்குள் கட்டிடங்களும், கட்டுமானப் பணிகளையும் சிலர் தொடக்கியுள்ளனர்.
இதனால் ஆற்றின் இரு கரைகளும் காணாமல் போய், கட்டிடங்களே காணப்படுகின்றன. இதனால் எதிர்காலத் தில் மிகப்பெரிய பொருட்சேதம் மட்டுமல்ல உயிர்ச்சேதமும் ஏற்பட வாய்ப் புண்டு என்கின்றனர் விருத்தாசலம் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து விருத்தாசலம் வட்டாட் சியர் சிவக்குமாரிடம் கேட்டபோது, "ஆற்றின் போக்கு மாறியதால் சில இடங்களில் பட்டா நிலங்களும் ஆற்றுக்குள் சிக்கிக் கொண்டன. இதுகுறித்து தற்போது சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கும் ஒரு நபர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அது பட்டா நிலம் என உறுதிசெய்துள்ளார். எனவே ஆக்கிரமிப்பு அல்ல பட்டா நிலம் தான்" என்றார்.
ஆனால் ஆற்றின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவதாகவும், காலப்போக்கில் மணிமுக்தாறு ஓடை என்ற நிலை உருவாகும் என்கின்றனர் விருத்தாசலம் நகரவாசிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT