Last Updated : 12 Sep, 2021 06:45 PM

 

Published : 12 Sep 2021 06:45 PM
Last Updated : 12 Sep 2021 06:45 PM

கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை 5 முறை இயக்க வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம்

கோவை

கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை தினசரி 5 முறை மீண்டும் இயக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர், 2021 மார்ச் மாதம் முதல் சிறப்பு ரயில் சேவையாக பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மேட்டுப்பாளையம் - கோவை இடையே பயணக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ,ராசா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை-மேட்டுப்பாளையம் இடையிலான பயணிகள் ரயில் தற்போது தினமும் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

முன்பு இந்த ரயில் 5 முறை இயக்கப்பட்டு வந்தது. மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால், கோவை- மேட்டுப்பாளையம் இடையே பேருந்தில் பயணிக்க அதிக நேரமாகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், சாதாரண பயணிகள் ரயிலில் கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், தினசரி கூலி வேலைக்குச் செல்வோர், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கோவை - மேட்டுப்பாளையம் இடையே சாதாரணப் பயணிகள் ரயிலை மீண்டும் தினசரி 5 முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x