Published : 12 Sep 2021 03:31 PM
Last Updated : 12 Sep 2021 03:31 PM

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

மாற்றப்பட்ட அதிகாரிகளும் அவர்கள் முன்பு வகித்த பதவிகள்:

* சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் கே.பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை பெருநகர் கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக சந்தீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக ரஜத் ஆர் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

* கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அங்கித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

* திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிராமப்புறம் துணை காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x