Published : 11 Sep 2021 04:57 PM
Last Updated : 11 Sep 2021 04:57 PM

புதுச்சேரியில் 46 பேருக்கு கரோனா: மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப்.11) வெளியிட்ட தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,071 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 28, காரைக்காலில் 9, மாஹேவில் 9 பேர் என மொத்தம் 46 பேருக்கு (1.50 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாகத் தொற்று பாதிப்பு இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 178 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 736 பேரும் என 914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,821 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. புதிதாக 126 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 940 (97.81 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 54 ஆயிரத்து 4 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x