Last Updated : 07 Sep, 2021 05:53 PM

 

Published : 07 Sep 2021 05:53 PM
Last Updated : 07 Sep 2021 05:53 PM

புதுச்சேரியில் 127 பேருக்கு கரோனா தொற்று: காரைக்காலில் பெண் ஒருவர் பலி

புதுச்சேரியில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தொற்றுக்கு காரைக்கால் பெண் பலியானார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை தரப்பில், “புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 479 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.புதுவையில் 496, காரைக்காலில் 192, ஏனாமில் 25, மாகேவில் 90 பேர் என 803 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் புதுவையில் 87, காரைக்காலில் 25, ஏனாமில் 2, மாகேவில் 13 பேர் புதிதாக தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இப்போது 974 பேர் கரோனா தொற்றுடன் உள்ளனர்.

புதுவையில் 40, காரைக்காலில் 11, மாகேவில் 15 பேர் என 66 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் சதவீதம் 97.75 சதவீதமாகியுள்ளது. காரைக்காலை சேர்ந்த 48 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2வது தவணை உட்பட 8 லட்சத்து 42 ஆயிரத்து 874 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x