Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப் படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட் டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலை செப்டம்பர் 15-ம் தேதிக் குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண் டுள்ளது. இதற்கிடையே, இத்தேர்தலை நடத்த மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மாநில தேர்தல் ஆணையம், அதேநேரத்தில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட 11 கட்சி களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநில தேர்தல் ஆணையர் பேசும் போது, ‘‘அரசியல் கட்சி பிரதிநிதிகளால் தெரி விக்கப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டவாறு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும். அதற் கான ஒத்துழைப்பை அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
கிரிராஜன் (திமுக): கரோனா பேரிடர் காலத்தில், தொற்று பரவலை தடுக்கும் விதமாக அதிக அளவில் வாக்குச்சாவடிகளை உருவாக்கி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும்.
டி.ஜெயக்குமார் (அதிமுக): காலை 7 முதல் இரவு 7 மணி வரை தேர்தல் நடக் கும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள் ளது. ஏற்கெனவே, திமுக ஆட்சிக் காலங் களில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வன்முறைகள் நடந்தன. இரவு நேரத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கலாம். எனவே, காலை 7 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
கராத்தே தியாகராஜன் (பாஜக): தற் போது வார்டு மறுவரையறை செய்யப்பட்ட வாறு தேர்தலை நடத்த வேண்டும். சட்டப் பேரவையில் அறிவித்தபடி, மாநகராட்சி, நகராட்சிகளுடன் பிற உள்ளாட்சி அமைப்பு களை சேர்க்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT