Published : 25 Feb 2016 10:27 AM
Last Updated : 25 Feb 2016 10:27 AM
தங்கள் கட்சி போட்டியிடும் தொகு திகளுக்கு மட்டுமே விருப்ப மனுக் களை பெறுவது என்ற முடிவை மதிமுக எடுத்துள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக, தேர்தலை புறக்கணித்தது. ஆனால், இந்தத் தேர்தலை எக்காரணம்கொண்டும் மதிமுக புறக்கணிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செய லாளர் வைகோ 2015-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கூறியிருந்தார். ஆரம்பத்தில், திமுக - மதிமுக கூட்டணி உருவாகும் என்று பேசப் பட்டது. ஆனால், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை மதிமுக உருவாக்கியுள்ளது.
இதையடுத்து, மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள், குறைந்த பட்ச செயல்திட்டத்தை விளக்கி பிரச் சார பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தேமுதிக, தமாகாவுக் காக காத்திருப்பதால் மக்கள் நலக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுவது, வேட் பாளர் நேர்காணல் போன்ற பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
இந்தச் சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மார்ச் 1-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித் தார். இதற்கிடையே, மதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளை கண்ட றிவதற்காக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப் பினர்களுடன் கடந்த 2 நாட்களாக திருச்சியில் வைகோ ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக மதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘மாவட்டச் செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில் தங்களுக்கு சாதகமான 100 தொகுதிகளின் பட்டி யலை தெரிவித்துள்ளனர். மார்ச் சில் தொகுதிப் பங்கீடு இறுதி ஆனதும், மதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனுக்கள் பெறப்படும். இதையடுத்து நேர்காணல் நடக்கும்’’ என்றார்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விருப்ப மனு கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் நேர் காணல் நடத்தப்படமாட்டாது என்றும் அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், போட்டியிடும் தொகுதி களுக்கு மட்டுமே விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று மதிமுக முடி வெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT