Last Updated : 02 Sep, 2021 05:07 PM

 

Published : 02 Sep 2021 05:07 PM
Last Updated : 02 Sep 2021 05:07 PM

புதுச்சேரியில் புதிதாக 92 பேருக்கு கரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 92 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 837 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(செப்.2) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,195 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-43, காரைக்கால்-23, ஏனாம்-3, மாஹே-23 பேர் என மொத்தம் 92 பேருக்கு (1.77 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 176(புதுச்சேரி-113, காரைக்கால்-35, ஏனாம்-6, மாஹே-22) பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 661(புதுச்சேரி-386, காரைக்கால்-156, ஏனாம்-18, மாஹே-101) பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 837 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் காரைக்காலைச் சேர்ந்த ஒருவர், மாஹேவைச் சேர்ந்த ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,815 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது. புதிதாக 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 150 (97.86சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 19 ஆயிரத்து 44 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x