Published : 01 Sep 2021 04:31 PM
Last Updated : 01 Sep 2021 04:31 PM

3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

சென்னை

நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ ஆகிய 3 மாவட்டங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி முனைவர்‌ பா.கீதா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில்,‌

01.09.2021:

நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ ஆகிய 3 மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, தேனி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

02.09.2021:

நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும்‌. கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும். நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்''‌.

இவ்வாறு முனைவர்‌ பா.கீதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x