கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் என்.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகநாளை (செப்.2) கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in