Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM

விற்பனைக்கான வழிவகை கோரி விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை முன் போராட்டம்

விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தக் கோரி சிலை தயாரிப்பாளர்கள், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பு நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா, வரும்10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாடவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம், தமிழ்நாடு மண்பாண்டம், விநாயகர் சிலை மற்றும் நாட்டுசெங்கல் தயாரிக்கும் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், விநாயகர் சிலைகளுடன் நேற்று பிற்பகல் 12.45 மணி அளவில்கூடி மறியலில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துஅப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் கூறும்போது,

‘‘தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பாதிப்பால் ஏற்கெனவே பொருளாதார ரீதியாககடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். நடப்பாண்டில் விநாயகர்சிலைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழக அரசு விதித்துள்ள தடையால் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது. எனவே, சிலைகளை விற்பனை செய்வதற்கானவழிவகையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x