Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM
உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக 9 பேரையும், அரசு ப்ளீடராக 2 பேரையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரமும், காவல்துறை தரப்பில் மாநில அரசுதலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னாவும் பதவி வகித்து வருகின்றனர். இதுதவிர வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக அரசு வழக்கறிஞர்களாக 70 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர்கள் ஹாஜா நசிருதீன், எஸ்.சிலம்பணன், ஆர்.ராமன்லால், வி.அருண், பி.குமரேசன், ஆர்.நீலகண்டன், ஜெ.ரவீந்திரன் ஆகியோரும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக வீரா.கதிரவன், ஆர்.பாஸ்கரன் என மொத்தம் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு ப்ளீடராக பி.முத்துக்குமாரையும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு ப்ளீடராக பி.திலக்குமாரையும் நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் பொறுப்பேற்கவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT