Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM
காரைக்கால் மாவட்டத்தை முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என புதுச் சேரி அரசுக்கு கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத் தின் 4 பிராந்தியங்களில், புதுச்சேரிக்கு அடுத்த பெரிய பிராந்தியமான காரைக்கால் பிராந்தியத்தை தனி மாவட்டமாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ள நிலையிலும், முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
இதனால், இங்குள்ள சூழலுக் கேற்ப அரசுத் துறைகள் சார்ந்த முடிவுகளை எடுப்பது, திட்டங்களை செயல்படுத்துவது, நிதி செலவினம் போன்ற பல நிலைகளில் சிக்கல்கள் நீடிப்ப தாகவும், பெரும்பாலான விஷயங்களுக்கு புதுச்சேரிக்கு கோப்புகளை அனுப்பியே முடிவு களை எடுக்க வேண்டியுள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, காரைக்கால் மாவட் டத்தை முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளர் எஸ்.பி.செல்வசண்முகம் கூறியது:
புதுச்சேரி முதல்வராக (1985-90) பரூக் மரைக்காயர் இருந்த காலக்கட்டத்தில் காரைக்காலை மாவட்ட அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.
புதுச்சேரி ஆட்சியாளர்களால் தொடர்ந்து காரைக்கால் புறக் கணிக்கப்பட்டு வந்ததால், காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண் டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 23.4.2005 அன்று காரைக்கால் போராட்டக் குழு தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 16.5.2005 அன்று காரைக்கால் பிராந்தியத்தை மாவட்டமாக தரம் உயர்த்தி, அப்போதைய முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது. ஆனாலும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவுகள், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை சிறப்பு செயலரின் ஒப்புதலுக்குட்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனால், காரைக்கால் ஆட்சியர் சில விஷயங்களில் தன்னிச்சையாக, ஒரு முழுமை யான அதிகாரம் பெற்ற ஆட்சி யராக முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், இந்திய மாவட்டங்கள் குறித்த மத்திய அரசின் பட்டியல்களிலும் காரைக்கால் முழுமையாக இடம்பெறவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துவிட்ட நிலையிலும், புதுச்சேரி அரசு காரைக்காலை நீதித்துறை மாவட்டமாக அறிவிக் கவில்லை.
காரைக்காலின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால், புதுச்சேரி அரசு காரைக்காலை முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக ஆக்க வேண்டும். தமிழகப் பகுதியில் உள்ளதுபோல, காரைக்கால் ஆட்சியருக்கு இன்னும் கூடுத லான அளவில் நிதியை கையா ளும் அதிகாரத்தையும், அரசுத் துறைகளை மேலாண்மை செய் யும் அதிகாரத்தையும் அளிக்க வேண்டும் என்றார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவுகள், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை சிறப்பு செயலரின் ஒப்புதலுக்குட்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT