Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தொழில்கல்வியில் அரசுப் பள்ளிகளுக்கு கிடைத்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற அரிய வாய்ப்பை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்.
இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நிர்வாகம்தானே தவிர, கல்வி முறையோ, ஆசிரியர்களோ, மாணவர்களோ அல்ல. எனவே, தொழிற்கல்வி படிப்புகளில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT