Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

சென்னை சென்ட்ரல் - கயா உட்பட 10 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவுரயில்கள், முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், தேவையைக் கருத்தில்கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னைசென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578),முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.

மறு அறிவிப்பு வரும் வரை,இந்த சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்படும் அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும். இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக. 28) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே நாளை (ஆக. 29) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11, 11.45, தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.50 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை கடற்கரை -செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12, 1, 1.20, 2 மணி, தாம்பரம் 11.30, 12.20, 12.40, 1.40, 2.20 மணி ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூரில் இருந்து அவை இயக்கப்படும்.

மேலும், தாம்பரம்-சென்னை கடற்கரை காலை 10.20, 11.30, மதியம் 12.10, 12,30, 1.50 காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 8.45, செங்கல்பட்டு- சென்னை கடற்கரை காலை 10.15, 11, மதியம் 12.25 ஆகிய மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x