Published : 27 Aug 2021 08:21 PM
Last Updated : 27 Aug 2021 08:21 PM

மதுரையில் தடுப்பூசி போட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது

மதுரை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 52,570 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது அலை ஆரம்பத்தில் தினமும், மதுரையில் மட்டுமே 1,800க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு கரோனா கட்டுப்பாடுகளால் படிபடியாக குறைந்து தற்போது தினமும் சராசரியாக 15 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தத் தொற்று பரவலையும் முற்றிலுக்கும் குறைக்க, மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஒரு வாரம் முன் வரை தினமும், 1800 பேருக்கு மட்டுமே போடப்பட்டது. தற்போது தினமும், 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

அதனால், தடுப்பூசி போட்டோர் எண்ணிக்கை இன்டன் 10 லட்சத்து 2 ஆயிரத்து 82 பேரை தாண்டியிருக்கிறது. தற்போது பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x