வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆக.29-ம் தேதி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆக.29-ம் தேதி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்
Updated on
1 min read

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிபுனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் அதிபர் பிரபாகர் அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29 மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 4.30 மணிக்கு பேராலய வளாகத்தில் புனித கொடி பவனி நடைபெறும். மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனித கொடியேற்றுகிறார்.

முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப்.7-ல் பேராலய வளாகத்தில் நடைபெறும். செப்.8-ல் ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். பின்னர், கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டவுடன், புனிதக்கொடி இறக்கப்பட்டு பெருவிழா நிகழ்ச்சி நிறைவுபெறும்.

கரோனா ஊரடங்கு காரணமாகபெருவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. விழாவை பேராலயத்தின் இணையதளத்தில் காணலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in