Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM
திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன பகடை கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் சுடுமண் பானைகள், உறை கிணறுகள், காதணிகள், சூதுபவளம், மனித எலும்புகளுடன் முதுமக்கள் தாழி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், யானை தந்தத்தால் ஆன பகடை தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளது. 4 கிராம் எடையுள்ள இந்த பகடையின் அளவு 1.5 செ.மீ. பகடையின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு வட்டக் கீறல்களுடன் கூடிய புள்ளிகள் இடம் பெற் றுள்ளன. வட்டக்கீறல்கள், பகடைகளின் மீது முத்திரையிடப்பட்டு உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT