Published : 26 Aug 2021 03:22 PM
Last Updated : 26 Aug 2021 03:22 PM

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா இன்று (ஆக. 26) வெளியிட்ட அறிவிப்பு:

"வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஆர்.எஸ்.சி.எல். அனந்தபுரம் (விழுப்புரம்) 10, கே.சி.எஸ் மில் அரியலூர் (கள்ளக்குறிச்சி) 8, மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) 6, பெரியகுளம் (தேனி), தண்டராம்பேட்டை (திருவன்ணாமலை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), ஹரூர் (தருமபுரி) தலா 5, முசிறி (திருச்சி) 4, வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கொடைக்கானல், குடியாத்தம் (வேலூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி) தலா 3, சித்தார் (கன்னியாகுமரி), விரகனூர் அணை (மதுரை) தலா 2, விருதுநகர், தேவகோட்டை (சிவகங்கை), மேட்டூர் (சேலம்) தலா1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

26.08.2021 முதல் 28.08.2021 வரை: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

29.08.2021 , 30.08.2021: கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

26.08.2021 முதல் 30.08.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x