Published : 02 Feb 2016 08:32 AM
Last Updated : 02 Feb 2016 08:32 AM

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று கருட சேவை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை, ஏகாந்த சேவை இன்று நடக்கவுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்ச விழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நாளன்று மாலையில் புன்னை மர வாகனத்தில் பெருமாள் ஊர்வ லமாக எடுத்துச் செல்லப்பட்டார். பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்றைய தினம், காலை 6 மணிக்கு சேஷ வாகன ஊர்வலமும், இரவு 8 மணிக்கு குதிரை வாகன ஊர்வலமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று காலை 5.30 மணியளவிலும், நண்பகல் 12 மணியளவில் ஏகாந்த சேவையும், இரவு 8 மணிக்கு அம்ச வாகன ஊர்வலமும் நடக்கவுள்ளது. திருத்தேர் உற்சவம் வரும் 6-ம் தேதியன்று நடக்கவுள்ளது. கண்ணாடி பல்லக்கு நிகழ்வு வரும் 8-ம் தேதி இரவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x