Published : 10 Feb 2016 08:37 AM
Last Updated : 10 Feb 2016 08:37 AM

ஆளில்லா விமானம் மூலம் படம் எடுத்த உக்ரைன் நாட்டினர் 9 பேருக்கு காவல்துறை எச்சரிக்கை

திருவண்ணாமலையில் உள்ள அண் ணாமலையை ஆளில்லா விமானம் மூலம் படம் எடுத்த, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 9 பேரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் வெளிநாட்டினர் படம் பிடிப்பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்படி, அவர்கள் சென்று தேடிப் பார்த்தும் யாரும் சிக்கவில்லை. இருள் சூழ்ந்ததால் அனைவரும் திரும்பி வந்தனர். பின்னர், நேற்று காலை மீண்டும் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலையில் இருந்து ஆளில்லா விமானத்துடன் வெளிநாட்டினர் 9 பேர் கீழே இறங்கி வந்தனர்.

இதையடுத்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் மலையிலேயே தங்கி சட்டவிரோத மாக கடந்த இரு தினங்களாக ஆளில்லா விமானம் மூலம் அண் ணாமலை, அண்ணாமலையார் கோயில் மற்றும் தி.மலை நகரை படம் பிடித்துள்ளனர். வெளிநாட்டி னர் என்பதால் அவர்களை எச்ச ரித்து போலீஸார் அனுப்பினர். அவர்களிடம் இருந்த ஆளில்லா விமானம், கேமரா மற்றும் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் பறி முதல் செய்தனர்.

இதேபோன்று ஆளில்லா விமா னம் மூலம் படம்பிடித்ததாக இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஜோசப் பென்ஜமினை கடந்த மாதம் 3-ம் தேதியும், சென்னையைச் சேர்ந்த 9 பேரை கடந்த மாதம் 10-ம் தேதியும் போலீஸார் எச்சரித்து அனுப்பினர் என்பதும், கடந்த 37 நாட்களில் இது 3-வது நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x