Published : 21 Aug 2021 02:43 PM
Last Updated : 21 Aug 2021 02:43 PM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்‌ முனைவர்‌ நா.புவியரசன்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக,

21.08.2021:

தமிழகத்தில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும் பெய்யக்கூடும்.

நாமக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல்‌, விருதுநகர்,‌ ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

22.08.2021:

தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, வேலூர்‌, துருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, சேலம்‌, தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல்‌, மதுரை, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

23.08.2021:

தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான
மழையும்‌, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, கரூர்‌, ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

24.08.2021:

தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, வட தமிழகத்தின்‌ ஒரு சில மாவட்டங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அவ்வப்போது கன மழையும்‌ இருக்கக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:
21.08.2021 முதல்‌ 25.08.2021 வரை:

தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக் கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌’’.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x