Published : 27 Feb 2016 09:36 AM
Last Updated : 27 Feb 2016 09:36 AM

அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக ஸ்டாலின், விஜயகாந்த், அன்புமணிக்கு சம்மன்

வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி மு.க.ஸ்டா லின், விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இம்மாதம் 3-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மழை வெள்ளம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதாக வும், அது அரசு மற்றும் முதல் வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், அதனால் விஜயகாந்த் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரியும் முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இவ்வழக்கு ஆவணங்களின் நகல்களைப் பெறு வதற்காக வரும் ஏப்ரல் 24-ம் தேதி நேரில் ஆஜராகும்படி விஜய காந்துக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதுபோல, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணி தலைவர் அன்பு மணி ராமதாஸ் ஆகியோர் மீது தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தனித்தனியாக தொடர்ந்த அவதூறு வழக்குகளில்,

“பிப்.3-ம் தேதி சென்னையில் நடந்த நமக்கு நாமே நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து அவதூறாகப் பேசியிருப் பதாலும், அன்புமணி ராமதாஸ், பிப்.4-ம் தேதி விமான நிலையத்தில் வெள்ளம் குறித்து அவதூறாக பேசி யிருப்பதாலும் இருவரையும் கிரி மினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று அமைச் சர் உதயகுமார் கோரியிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், மு.க.ஸ்டா லின் ஏப்.18-ம் தேதியும், அன்புமணி ராமதாஸ் ஏப்.21-ம் தேதியும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x