ரஜினி மகள் சவுந்தர்யா திருச்செந்தூரில் தரிசனம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்  சவுந்தர்யா.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் சவுந்தர்யா.
Updated on
1 min read

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, தனது கணவருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகளும் திரைப்பட இயக்குநருமான சவுந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் நேற்று காலை திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். கோயிலில் நடைபெற்ற அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, சுமார் 2 மணி நேரம் வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து, கோயில் யானை தெய்வானைக்கு பழங்கள், வெல்லம் மற்றும் கரும்புகள் வழங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். கரோனா ஊரடங்கால் இன்று முதல் 3 நாட்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்பதால், நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள், சவுந்தர்யா வந்திருப்பதை அறிந்து ஆர்வமுடன் அவரை வேடிக்கை பார்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in