Published : 27 Feb 2016 08:56 AM
Last Updated : 27 Feb 2016 08:56 AM
மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்லில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சி களுடன் 3-வது அணி அமைத்த பாஜக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதுபோன்ற கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. ஆனால் இதற்கு தேமுதிக, பாமக எந்தப் பிடியும் கொடுக்காததால் கூட்டணி அமைக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சு நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல் ஆகி யோரை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நியமனம் செய்துள்ளார். அவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர்.
பாஜக தேசிய பொதுச்செய லாளரும், தமிழக பொறுப்பாளரு மான பி.முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கடந்த ஜனவரி மாதத்தில் சந்தித்துப் பேசினர். ஆனால், இருவரும் கூட்டணி தொடர்பாக எந்த சாதகமான பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று மாலை சென்னை வருகிறார். இன்று இரவு அல்லது நாளை காலை விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஜக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சனிக்கிழமை மாலை சென்னை வரும் பிரகாஷ் ஜவடேகர், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இங்கு தங்கியிருப்பார். அப்போது கூட்டணி தொடர்பாக விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்’’ என்றார்.
தேமுதிக, பாமக தவிர கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோ ரையும் பிரகாஷ் ஜவடேகர் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சியையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேச்சு நடத்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT