Published : 06 Feb 2016 08:46 AM
Last Updated : 06 Feb 2016 08:46 AM
நாகூர் கண்ணாடி நகரைச் சேர்ந்தவர் முகமது அமீர்(62). இவர், நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா படத்தை வெளியிட்டு, அவரைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பதிவிட்டிருந்தாராம்.
இதுகுறித்து நாகூரைச் சேர்ந்த ரம்ஜான் அலி(48) நாகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி முகமது அமீரை நேற்று முன் தினம் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
முகமது அமீர் திமுகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் திமுகவில் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை.
முகமது அமீன் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 504, 507 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT