Published : 14 Aug 2021 12:18 PM
Last Updated : 14 Aug 2021 12:18 PM

மூலிகைச் செடிகள்; 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

மூலிகைச் செடிகள் கொண்ட தழைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் சிறப்பம்சங்கள்:

* அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1,000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ளவும் மானியம் வழங்கப்படும்.

* காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் ரூ.95 கோடியில் செயல்படுத்தப்படும்.

* மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தழைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

* வைட்டமின் சி பெட்டகம் என அழைக்கப்படும் நெல்லி. 200 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும்.

* மூலிகை செடிகள், நெல்லி காய்கள் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணை மற்றும் மூலிகை மருந்து நிறுவனத்துக்கு வழங்கப்படும். மூலிகை செடிகளை பெருக்கும் திட்டம், ரூ.2.18 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

* அறுவடைக்குப் பின் இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்க ரூ.52.02 கோடி நிதி ஒதுக்கீடு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x