Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM
மின்னாளுகை பயன்பாட்டில் ஏனைய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கிவிட்டது. மக்கள் நேரடியாக அணுகும் முக்கியத் துறைகளில் மின்னாளுகைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55 சேவைகள் இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் 29 துறைகள் மூலமாக வழங்கப்படக்கூடிய 600-க்கும் மேற்பட்ட சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்படும். அனைத்து தகுதி வாய்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கும் அகண்ட அலை வரிசை இணைப்பு பாரத்நெட் இணைப்புத் திட்டத்தின் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலத்திலுள்ள 12,525 கிராமங்களுக்கும் குறைந்தபட்சம் 1 ஜிபிபிஎஸ் அலைவரிசை இணைப்பு கண்ணாடி இழைவடம் (optical fibre) வாயிலாக வழங்கப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகள் பெரிதும் மேம்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT