Last Updated : 13 Aug, 2021 04:30 PM

 

Published : 13 Aug 2021 04:30 PM
Last Updated : 13 Aug 2021 04:30 PM

புதுச்சேரியில் 113 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை

புதுச்சேரி

புதுச்சேரியில் 113 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஏற்படவில்லை. தொற்று பாதிப்பு சதவீதம் 2.01 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஆக.13) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,629 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-67, காரைக்கால்-12, மாஹே-34 என 113 (2.01 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 195 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 749 பேரும் என மொத்தமாக 944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் உயிரிழப்பு இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,803 ஆகவும், இறப்பு விகிதமும் 1.48 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 355(97.75 சதவீதம்) ஆக இருக்கிறது.

இதுவரை 15 லட்சத்து 68 ஆயிரத்து 798 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 13 லட்சத்து 40 ஆயிரத்து 626 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 985 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x