அரசு ஊழியர் பேறுகால விடுப்பு 12 மாதங்கள்; 2022 ஏப்ரலில் அகவிலைப்படி உயர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதன் சிறப்பம்சங்கள்:

* இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை 1-7-2021 முதல் முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும்.

* பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

* அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 1-4-2022 முதல் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in