Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி

சென்னை

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைதிகளை அவர்களின் உறவினர்கள் நேரில்சந்திக்க கடந்த ஏப்.27 முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்க வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் அனுமதி வழங்கி சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிறைவாசியை சந்திக்க வருபவர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டசான்றிதழ் அல்லது 72 மணிநேரத்துக்குள் பரிசோதனைசெய்து, தொற்று இல்லை எனசான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை 15 நிமிடம் சந்திக்க அனுமதி வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x