Published : 10 Feb 2016 08:53 AM
Last Updated : 10 Feb 2016 08:53 AM
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (84) பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். 47-வது நாளாக திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் நாங்குநேரி அருகே உள்ள பாணான்குளம் பகுதியில் நேற்று நடைபயணத்தைத் தொடர்ந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், குமரி அனந்தன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT