

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்களையும் விரட்டியடித் துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 241 விசைப்படகுகளிலும், ஜெக தாப்பட்டினத்தில் இருந்து 109 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண் டிருந்த கோட்டைப்பட்டினம் ரா.கோட்டைசாமி(37), ரூ.மெரி சன்(19), சி.ஜெமினி(44), ம.பரம சிவம்(42), ஜெகதாப்பட்டினம் ச.விக்னேஷ்(23), ரா.பழனி(45), பா.மணிகண்டன்(23), ம.செல்வ நாதன்(35), ரா.திலீப்(24) ஆகி யோரை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்கள் அதிர்ச்சி
ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராடி வரும் சூழலில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கடற்படையினர் துப்பாக்கிச்சூடு
தமிழக மீனவர்களின் 75 விசைப் படகுகளை மீட்டுத்தர வேண்டும். இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்க வேண்டும். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் கொண்டுவர வேண்டும். கச்சத் தீவை மீட்டுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 24-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
அரசின் சமரச பேச்சுவார்த் தைக்குப் பின்னர் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில், 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ராமேசுவரம் பகுதி மீனவர் கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண் டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது எனக் கூறி துப் பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக மீனவர்கள் தெரிவித்த னர். இதனால் உயிருக்கு பயந்து, கடலில் விரித்திருந்த வலை களைக்கூட எடுக்காமல் கரை திரும்பியதாகவும், இதனால் படகு ஒன்றுக்கு ரூ.5000 வரை நஷ்டம் ஏற்பட்ட தாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.