Published : 01 Feb 2016 08:37 AM
Last Updated : 01 Feb 2016 08:37 AM

பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங் கியது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் வெகு விமர்சை யாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந் தாண்டு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10 மணி யளவில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் ஏராளமான அளவில் பக்தர்கள் பங்கேற்று பெரு மாளை தரிசித்தனர். பின்னர் மாலையில் புன்னை மர வாகனத்தில் பெருமாள் வீதிவுலா வந்தார்.

இன்று காலை சேஷ வாகனத்திலும் மாலையில் சிம்ம வாகனத்திலும் பெருமாள் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நாளை கருடசேவை

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை அதிகாலை நடக்கவுள்ளது. திருத்தேர் வடம்பிடித்தல் வரும் 6-ம் தேதியன்று நடக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x