Published : 10 Feb 2016 08:44 AM
Last Updated : 10 Feb 2016 08:44 AM

சரண்யா உடல் மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி

விழுப்புரம் மருத்துவ மாணவி சரண்யாவின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரிய மனுவை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின் றனர். இதில் மோனிஷாவின் உடல் சென்னை உயர் நீதி மன்ற உத்தரவுப்படி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் சரண்யாவின் உடலை யும் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி அவ ரது தந்தை ஏழுமலை வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை கேட்டபிறகு நீதிபதி அளித்த உத்தரவில், ‘மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தர விட்டது என்பதற்காக, சரண்யா வின் உடலையும் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது. மேலும் உடல் புதைக்கப்பட்டு 9 நாட் கள் கழித்து இந்த மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படு கிறது. அதேநேரம், வழக்கின் தற் போதைய நிலை குறித்த அறிக் கையை வரும் பிப். 12-ம் தேதி அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x