Published : 16 Feb 2016 09:08 AM
Last Updated : 16 Feb 2016 09:08 AM
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் 650 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூன் 24-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 31-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது.
ஆனால், கடந்த 4-ம் தேதி நீராவிக் குழாயில் ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது நீக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.40 மணி யளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அப்போது, 80 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, நேற்று காலை 9 மணிக்கு 550 மெகாவாட்டாகவும், மாலையில் 650 மெகாவாட்டாகவும் உயர்ந்தது.
தொடர்ந்து 2 நாட்களுக்கு அதே அளவு மின் உற்பத்தி செய்யப்படும். சில ஆய்வுகளுக்குப்பின் ஓரிரு தினத்துக்குப் பிறகு முழு மின் உற்பத்தித் திறனான ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT