Last Updated : 06 Aug, 2021 03:23 PM

 

Published : 06 Aug 2021 03:23 PM
Last Updated : 06 Aug 2021 03:23 PM

புதுச்சேரியில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 88 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஆக.6) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,836 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-55, காரைக்கால்-8, ஏனாம் 3, மாஹே-22 என 88(1.51 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 179 (புதுச்சேரி-110, காரைக்கால்-22, ஏனாம்-7, மாஹே-40) பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 693(புதுச்சேரி-527, காரைக்கால்-99, ஏனாம்-22, மாஹே-45) பேரும் என மொத்தமாக 872 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 58 வயது பெண் தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 1,799 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. புதிதாக 103 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 750 (97.80 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 15 லட்சத்து 31 ஆயிரத்து 97 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 13 லட்சத்து 9 ஆயிரத்து 163 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 27 ஆயிரத்து 307 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x