Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-03 செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
நம் நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்து கிறது.
இதற்கிடையே, புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புபணிகளுக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன ‘ஜியோஇமேஜிங்’ செயற்கைக் கோளைஇஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ராக்கெட் ஏவும் திட்டம் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், கரோனா பரவலால் ராக்கெட் ஏவும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, திட்டப் பணிகளை இஸ்ரோ மீண்டும் முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி - எப்10 ராக்கெட் மூலம் இஓஎஸ்-03 செயற்கைக் கோள் ஆகஸ்ட் 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இஓஎஸ் செயற்கைக் கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள 5 விதமான 3டி கேமராக்கள், தொலைநோக்கி மூலம்புவிப்பரப்பை துல்லியமாக படம்எடுக்க முடியும். இதன்மூலம் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT