Published : 26 Feb 2016 09:03 AM
Last Updated : 26 Feb 2016 09:03 AM
சென்னையில் 'ராடன் குறும்பட திருவிழா’ தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ராதிகாவிடம், ‘‘விஜயகாந்த் உடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவருடைய மாநாடு பேச்சு குறித்து என்ன நினைக்கிறீர்கள்’’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
விஜயகாந்துடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்யும் மனப்பான்மை உடையவர் அவர். ஆனால்,அரசியல் என்பது வேறு ஒரு களம். ஒரு வாக்காளராக இருந்துபார்க்கும் போது, விஜயகாந்த் அரசியல் செய்வது சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. காஞ்சிபுரம் மாநாட்டில் அவர் பேசியதை முழுமையாக படித்தேன். அவர் என்ன பேசினார் என்பது அவருக்குத்தான் தெரியும். எனக்குத்தான் புரியவில்லையோ என்று நினைத்து என் வீட்டுக்காரர் சரத்குமாரிடம் கொடுத்தேன். அவரும் படித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சிரித்துவிட்டார். இவ்வாறு ராதிகா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT