Published : 08 Feb 2016 08:52 AM
Last Updated : 08 Feb 2016 08:52 AM
தமிழக சிறைகளில் 10 ஆண்டு களுக்கு மேல் உள்ள கைதிகளை விடுவிக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அபுதாஹிர் போன்ற முஸ்லிம் ஆயுள் கைதிகள், ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட தமிழகத்தில் 10 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மமக சார்பில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை சேப்பாக் கத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லா பேசியதாவது:
அதிமுக ஆட்சி காலத்தில், 1992-ல் 230 பேரும், 1993-ல் 132 பேரும், 2011-ல் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல், திமுக ஆட்சி காலத்தில் 2007-ல் 16 பேரும், 2008-ல் 1,405 பேரும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.
எனவே, அபுதாஹிர் உள்ளிட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள், பேரறிவாளன் உட்பட 10 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து ஆயுள் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT