Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM

சட்டப் படிப்புகளில் சேர ஆக.4 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு

சட்டப் படிப்புகளில் சேர வரும் 4-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.பாலாஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் (www.tndalu.ac.in) மூலமாக ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம் உள்ளிட்டவிவரங்களையும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

3 ஆண்டுகால எல்எல்பி, 2ஆண்டுகால எல்எல்எம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 ஆண்டுகால எல்எல்பி, 2 ஆண்டுகால எல்எல்எம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x